அவுஸ்திரேலியர்களுக்கு அதிக ஆபத்துள்ள பயண இடமாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் முற்றாக மறுத்துள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ பயண ஆலோசனையின் நிலை மாறவில்லை என்று உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
புதுப்பித்த பயண ஆலோசனை
இதன்படி, துல்லியமான மற்றும் புதுப்பித்த பயண ஆலோசனைகளுக்கு அவுஸ்திரேலியர்கள், அதிகாரப்பூர்வ ஸ்மார்ட் டிராவலர் வலைத்தளத்தை நம்பியிருக்குமாறு உயர் ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் சில செய்திகள் இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பயண ஆலோசனையில் மாற்றங்களை தவறாக பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய பயண ஆலோசனைக்கு சுற்றுலாப் பயணிகள் எப்போதும் ஸ்மார்ட் டிராவல்லரைப் பார்க்க வேண்டும் என்று உயர் ஸ்தானிகராலயம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

