Last Updated:
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் மறுமுனையில் ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக ரன்கள் சேர்த்து சதம் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்ற பரபரப்பான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 7 சிக்சர் 8 பவுண்டரியுடன் 89 ரன்கள் குவித்தார். சிவம் துபே 43 ரன்களும், இஷான் கிஷன் 39 ரன்களும் எடுத்தனர்.
கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 12 பந்துகளில் 27 ரன்களும், திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் மற்றும் ஆடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 5 ரன்களிலும், கேப்டன் ஹேரி ப்ரூக் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த டாம் பான்டன் 17 ரன்களில் வெளியேறினார். 4 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 95 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது இணைந்த வில் ஜாக்ஸ் – பெத்தேல் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் 5 ஆவது விக்கெட்டிற்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
வில் ஜாக்ஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் மறுமுனையில் ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக ரன்கள் சேர்த்து சதம் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் வெற்றி பெற 30 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்திலேயே ஜேக்கப் பெத்தேல் 105 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி வரும் ஞாயிறு அன்று அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
Mar 05, 2026 10:54 PM IST


