இந்நிலையில், இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து கடந்த 4 நாட்களாக நடத்திய தொடர் தாக்குதலில் ஈரானில் மட்டும் 1,097 பேர் உயிரிழந்தனர். இதில் 181 குழந்தைகளும் அடங்கும். அவர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதுதவிர, 100 குழந்தைகள் உள்பட 5,402 பேர் காயமடைந்து உள்ளனர்.
கடந்த 4 நாட்களாக நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் மொத்தம் 1,164 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், லெபனான் – 40 பேர், இஸ்ரேல் – 11 பேர், ஈராக் – 2 பேர், குவைத், யு.ஏ.இ. – தலா 3 பேர், பஹ்ரைன், ஓமனில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர். ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கான செய்தி அமைப்பு வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. எனினும், ஈரானில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் அந்த அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
