Last Updated:
நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் வெறும் 33 பந்துகளில் 8 சிக்சர் 10 பவுண்டரியுடன் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் வெறும் 33 பந்துகளில் 8 சிக்சர் 10 பவுண்டரியுடன் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். நாளை நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியை நியூசிலாந்து வரும் ஞாயிறு அன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணியில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குவின்டன் டி காக் 10 ரன்னிலும், ரியான் ரிக்கெல்டன் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
கேப்டன் மார்க்ரம் 20 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். டெவால்ட் ப்ரெவிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ஓரளவு ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். பிரெவிஸ் 34 ரன்களும், ஸ்டப்ஸ் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் மார்கோ யான்சென் 30 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து 55 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் என்கிற ஓரளவு சவாலான ஸ்கோரை தென்னாப்பிரிக்கா எட்டியது.
Mar 04, 2026 10:02 PM IST


