நாட்டின் “தற்போதைய பாதுகாப்பு நிலைமையை” காரணம் காட்டி, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அனைத்து விசா நியமனங்களையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள தூதரகங்களுக்கும் பொருந்தும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த இரத்து மார்ச் 6 வெள்ளிக்கிழமை வரை அமலில் இருக்கும் என்று அது கூறியது.
அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்
ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கராச்சி துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

