இதனிடையே, விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை ‘அன்பாலோ’ செய்துவிட்டார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீபோல் பரவியது. இதனால் விஜய் குடும்பத்தில் பிரச்சினை வெடித்துவிட்டது என்று பேசப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த தகவல்களுக்கு விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் கணக்குகளை ஜேசன் சஞ்சய் இதுவரை பின்தொடர்ந்ததே இல்லை என்றும், அதனால் ‘அன்பாலோ’ செய்தார் என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தந்தை-மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரத்தினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
