Last Updated:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி டிரோன்களை ஏவி தாக்கிக்கொள்கின்றனர்.
துபாயில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஓட்டல்களில் தங்கியுள்ள பயணிகளை, பணம் இல்லாததைக் காரணம் காட்டி வெளியேற்ற வேண்டாம் என ஓட்டல்களுக்கு துபாய் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி டிரோன்களை ஏவி தாக்கிக்கொள்ளும் நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபா அருகே ஈரான் ஏவுகணையை வீசி தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனால் துபாயில் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இந்தியர்கள் உட்பட ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர். ஏராளமான பயணிகள் துபாய் ஓட்டல்களில் தஞ்சம் புகுந்த நிலையில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என கணிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் ஓட்டல்களில் தங்கியுள்ளவர்களிடம் கட்டணம் செலுத்த பணம் இல்லாவிட்டால் அதைக் காரணம் காட்டி அவர்களை வெளியேற்ற வேண்டாம் என துபாய் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் செலுத்த வேண்டிய கூடுதல் தொகையே துபாய் அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான வசதிக்குறைபாடுகளும் ஏற்படாமல் இருப்பதை ஓட்டல் நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Mar 02, 2026 11:03 AM IST


