Last Updated:
50 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 4 சிக்சர் 12 பவுண்டரியுடன் 97 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
குரூப் 1 பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறதி சுற்றை உறுதி செய்த நிலையில் அடுத்து அரையிறுதிக்கு செல்லும் அணியை தீர்மானிக்கும் போட்டியாக இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்கிற நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஷிம்ரோன் ஹெட்மேயர் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து 14 ரன்களில் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் ரதர்போர்டு வெளியேறினார்.
பின்னர் இணைந்த ரோமன் பவல் – ஜேசன் ஹோல்டர் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. பவெல் 34 ரன்களும், ஹோல்டர் 37 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் குவித்தது.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர். இதனால் எந்த நெருக்கடியும் இல்லாமல் இலக்கை நோக்கி இந்திய அணி முன்னேறியது.
அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் தலா 10 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் சூர்ய குமார் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். திலக் வர்மா 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக ரன்கள் சேர்த்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர் 12 பவுண்டரியுடன் 97 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மார்ச் 5 ஆம் தேதி மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
Mar 01, 2026 10:55 PM IST


