ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானது. இதில், கமேனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அந்நாட்டு தொலைக்காட்சி உறுதி செய்தது. மேலும் கமேனியின் மகள், மருமகன், பேரக்குழந்தை கொல்லப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டதற்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

