
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு 213 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், சஹிப்ஸடா பர்ஹானின் 100 (60), பக்கர் ஸமனின் 84 (42) ஓட்டங்களோடு 8 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க 4-0-33-3, மகேஷ் தீக்ஷன 4-0-35-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

