Last Updated:
அவரது இந்த மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பை பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் உலகத்தினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
தந்தையின் மரணத்தை தொடர்ந்து துக்கம் அனுசரித்த இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் , கல்லீரல் புற்றுநோயுடன் நீண்ட காலம் போராடி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். தனது தந்தையின் உடல்நிலை மோசமடைந்த தகவலை அறிந்ததும், டி20 உலகக் கோப்பை தொடரின் இடையிலேயே தனது குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க ரிங்கு சிங் அலிகார் சென்றிருந்தார்.
அங்கு தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை வெள்ளிக்கிழமை மாலை கண்ணீருடன் நிறைவேற்றிய அவர், இன்று மாலை கொல்கத்தாவில் உள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். தந்தை சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்துத் தன்னை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்கியவர் என்பதால், ரிங்கு சிங்கிற்கு இது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ‘சூப்பர் 8’ போட்டி இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில், ரிங்கு சிங்கின் வருகை அணிக்கு மிகப்பெரிய பலத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.


