Last Updated:
திரவுபதி முர்மு, Prachand ஹெலிகாப்டரில் துணை விமானியாக 25 நிமிடங்கள் பயணித்து, ஜெய்சல்மர் விமானப்படை தளத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக பயணித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.
ராஜஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஜெய்சல்மரில் உள்ள விமானப்படை தளத்திற்கு சென்றார். அங்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான ‘பிரசண்ட் (Prachand)-ல் அவர் பயணம் மேற்கொண்டார்.
சுமார் 25 நிமிடங்களுக்கு துணை விமானியாக பயணித்த குடியரசுத்தலைவர், விமானப்படையின் வாயுசக்தி பயிற்சி பகுதியை ஆய்வு செய்தார். மேலும் ஹெலிகாப்டரில் பறந்தபடியே அவர் வானொலி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, இந்த ஹெலிகாப்டர் தன்னம்பிக்கையின் சின்னமாக இருப்பதாகவும், நமது துணிச்சலான வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
போர் ஹெலிகாப்டரில் துணை விமானியாக பயணித்த முதல் குடியரசுத் தலைவர்.. திரவுபதி முர்மு புதிய சாதனை!


