• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் போனஸ்: மந்திரி பெசார் அமிருடின் அதிரடி அறிவிப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் போனஸ்: மந்திரி பெசார் அமிருடின் அதிரடி அறிவிப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷா ஆலம் | பிப்ரவரி 27, 2026

புனித ரமலான் மற்றும் வரவிருக்கும் ஐடில்பித்ரி (நோன்புப் பெருநாள்) பண்டிகையை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை, வரும் மார்ச் 19-ஆம் தேதி முதல் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மார்ச் மாதத்திற்கான சம்பளம் மார்ச் 13 முதல் 16-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்பதால், பண்டிகைச் செலவுகளுக்குத் தட்டுப்பாடு இருக்காது என மந்திரி பெசார் உறுதியளித்தார்.

மேலும் மாநில அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினருக்கும் இந்தச் சிறப்பு நிதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது, அதில் கிராம சமூக மேலாண்மைக் குழு (MPKK) உறுப்பினர்கள், இந்தியச் சமூகத் தலைவர்கள் மற்றும் இளையோர் அமைப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு மாத அலவன்ஸ் (குறைந்தபட்சம் RM500) வழங்கப்படும்.

அதேநேரம் சிலாங்கூரில் பணியாற்றும் காவல்துறை, ராணுவம், தீயணைப்புத் துறை, ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் (மாதச் சம்பளம் RM3,000-க்கு கீழ் உள்ளவர்கள்) என சுமார் 50,000 பேருக்கு தலா RM300 வழங்கப்படும்.

சிலாங்கூர் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் (Wajar) பதிவு செய்துள்ள ஊடகப் பணியாளர்களுக்கு RM1,000 சிறப்பு நிதி வழங்கப்படும் என்றார் அவர்.

இந்த ‘கித்தா சிலாங்கூர்’ (Kita Selangor) சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டத்திற்காக மாநில அரசு மொத்தம் RM66.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

“அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த போனஸ் வழங்கப்படுகிறது. இது பண்டிகைக் காலத்தில் அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.



Read More

Previous Post

Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; “உலக அளவில் 6G தொழில்நுட்பத்தில் இந்தியா முக்கிய இடம்” – அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள இந்தியா

Next Post
Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள இந்தியா

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin