Last Updated:
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் அரஸ்ட், தனிநபர் தரவு பாதுகாப்பு, டீப்ஃபேக், சமூக ஊடக சிக்கல்கள் குறித்து முக்கிய உரையாற்றினார்.
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் அரஸ்ட் செய்து பணம் பறிப்பது குறித்து பேசியுள்ளார்.
நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2026 இல் பங்கேற்ற மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், சிறார்களுக்கான சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை இந்தியா பின்பற்ற முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தில், உலகிற்காக நாம் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கினோம். அது எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நமது குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதே நோக்கம்.
இணையத்தின் தன்மை மாறிவிட்டது. அனைத்து வகையான உள்ளடக்கங்களும் ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தி பரப்பப்படுகின்றன. எனவே ஒழுங்குமுறை சிந்தனை அதற்கேற்ப உருவாக வேண்டும். அதிகரித்து வரும் சிக்கலான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பில் நமது குழந்தைகளைப் பாதுகாப்பது மற்றும் நமது சமூக நிறுவனங்களைப் பாதுகாப்பது ஆகியவை அரசாங்கத்தின் முன்னுரிமையில் இருக்கின்றன.
செயற்கையாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் (டீப்ஃபேக்குகள்) மிகப்பெரிய வீச்சு உள்ளது. ஊடக தளங்களில் பரவும் தவறான விளம்பரங்களின் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன.
ஓய்வு பெற்றவர்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறார்கள். இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

