தேசிய அமைப்புகளும், சமூக அமைப்புகளும் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பதை இந்த தற்காப்பு காட்சியின் மூலம் காட்ட விரும்புகிறோம் என மேஜர் சுப்பிரமணியம் சிங்காரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாடாங் மற்றும் புரோமொண்டரியில் அணி வகுப்பு நடைபெறும்.
மேலும் பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதி வழியாக அணி வகுத்து வீரர்கள் செல்வார்கள். இது முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் இணைந்து கடலோர கொண்டாட்டங்கள் நடைபெறும். மக்கள் கழகத்துடன் இணைந்து குடியிருப்பு பகுதியில் கொண்டாட்டங்கள் நடத்தப்படும்.
இந்த இடங்களில் மக்கள் கலை நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் வான வேடிக்கைகள் போன்றவைகளை காணலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு தேசிய தினத்தின் கருப்பொருள்”என்றென்றும் ஒன்றாவோம்”
சிங்கப்பூர் தனது 59 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளது.

