ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் ஒப்படைத்துள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர்க்களத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் அவ்வப்போது ஒப்படைத்து வருகின்றன.
இந்த நிலையில், போரில் கொல்லப்பட்ட 1,000 உக்ரைன் வீரர்களின் உடல்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் ரஷ்ய அரசு ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைதிப் பேச்சுவார்த்தை
அத்தோடு, அதற்கு நிகராக 35 ரஷ்ய வீரர்களின் உடல்களை உக்ரைன் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் இருநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் இருநாடுகளின் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

