Last Updated:
பரஸ்பர வரி விதிப்புக்கு மாற்றாக புதிய வரி விதிப்பதற்கான மாற்று வழிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருவதில் ஆச்சரியம் இல்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுபற்றிய அனைத்து முன்னேற்றங்களையும் ஆய்வு செய்து வருவதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்பட உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனை கடுமையாக விமர்சித்த டிரம்ப், உலக நாடுகளுக்கான வரி விதிப்பை 15 விழுக்காடாக நிர்ணயித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் குறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிபர் டிரம்பின் வரி விதிப்பை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அமெரிக்க நிர்வாகத்தால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அனைத்து முன்னேற்றங்களையும் ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது பாதிக்கும் என்பதை உணர்ந்தார்களா என்றும் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
Delhi,Delhi,Delhi


