பலாலி பகுதியில் உள்ள உயர்ந்த பாதுகாப்பு மண்டல (HSZ) நிலங்களை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கையைச் சுற்றி தொடர்ந்தும் அரசியல் மற்றும் சமூக சர்ச்சை காணப்படுகின்றன.
போருக்குப் பிறகு இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த நிலங்களை மீட்டளிக்கக் கோரி நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், அப்போது பதவியில் இருந்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் சில பகுதிகளை கட்டங்களாக விடுவித்தது.
பின்னர், ரணில் ஆட்சிக்காலத்திலும் மேலும் சில நிலங்கள் விடுவிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
ஆயினும், அனைத்து நிலங்களும் இன்னும் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, சில முக்கிய இடங்களில் இராணுவத்தின் இருப்பு தொடர்வதாகவும், மீளக் குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

