Last Updated:
Priyanka Gandhi | அசாம் தேர்தலை முன்னிட்டு பாஜக அரசுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் கொண்ட குற்றப்பத்திரிகையை பிரியங்கா காந்தி வெளியிட்டார்.
அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார்.
126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அரசின் நிர்வாக சீர்கேடு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் தலைமையிலான குழு விசாரித்து கட்சித் தலைமையிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அசாம் மாநிலத்துக்கான கட்சி வேட்பாளா்கள் தோ்வுக் குழு தலைவருமான பிரியங்கா காந்தி, இரண்டு நாள் பயணமாக நேற்று கவுகாத்தி வந்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக அரசுக்கு எதிரான காங்கிரஸின் ‘குற்றப்பத்திரிகையை’ வெளியிட்டாார். இதில் 20 குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.


