Last Updated:
மோகன் பகவத் லக்னோவில் இந்துக்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார், சமூகம் ஒன்றிணைப்பு மற்றும் ஊடுருவல்களை கண்டறிந்து நாடு கடத்த வேண்டும் என்றார்.
இந்துக்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், இந்துக்களின் எண்ணிக்கை சரிந்து வருவதாக கூறினார். எனவே இந்து சமூத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்துக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
ஊடுருவல்கள் கவலையளிப்பதாக கூறிய மோகன் பகவத், அவர்களை கண்டறிந்து நாடு கடத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடாது எனவும் கூறினார். ஆய்வுகளின்படி, ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு கீழ் குழந்தைகள் இருந்தால் அந்த சமூகம் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் என கூறப்படும் நிலைியல்,
இந்து குடும்பங்கள் ஒவ்வொருன்றும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ணே்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் திருமணத்தின் நோக்கம் என்பது சொந்த விருப்பங்களை தீர்ப்பதற்கானது மட்டுமல்ல, சந்ததிகளை வளர்ப்பதற்கும் தான் என்பதை புதிதாக திருமணம் செய்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும என்றும் கூறினார்.
“இந்துக்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்..” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்


