Last Updated:
IND vs PAK | பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உடன் மோதல் போக்கில் நடந்து கொண்ட வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உடன் மோதல் போக்கில் நடந்து கொண்ட வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உடன் மோதல் போக்கில் ஈடுபட்டது பேசுபொருளானது.
கொழும்புவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இஷான் கிஷானின் அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 40 பந்துகளில் 77 ரன்களை விளாசிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் ஆட்டநாயகன் பட்டத்தை தட்டி சென்றார்.
இதனிடையே பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் கைகுலுக்கியபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் குல்தீப் யாதவிடம் தவறாக நடந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலானது. பாகிஸ்தான் அணியின் 18வது ஓவரில் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இடையே மோதல் ஏற்பட்டது. ஷாஹீன் அப்ரிடிக்கு ஹர்திக் பந்து வீசிக் கொண்டிருந்தபோது, அந்த ஓவரின் இரண்டாவது பந்து குல்தீப் யாதவுக்கு சென்றது, ஆனால் அவர் அதைப் பிடிக்கத் தவறிவிட்டார்.
அவர் ஒரு எளிய கேட்சை விட்டார், பந்து அவரைத் தாண்டி சிக்ஸராக பறந்தது. இது ஹர்திக்கை கோபப்படுத்தியது. இதையடுத்து போட்டிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் கைகுலுக்கிக்கொண்டிருந்தபோது, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா குல்தீப் யாதவிடம் தவறாக நடந்து கொண்டனர். நிலைமை மோசமடைவதைக் கண்ட ரிங்கு சிங் தலையிட்டார். குல்தீப் யாதவும் எந்த உற்சாகமும் இல்லாமல் சோகமாக இருப்பதும் வீடியோவில் பதிவானது.
இது வைரலாகி சர்ச்சையான நிலையில் தற்போது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் சமூக ஊடகங்களில் குல்தீப் யாதவுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, “உன் கோபத்தை விட்டுவிடு தம்பி…” என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் குல்தீப் யாதவ்வை சூர்யகுமார் யாதவ் சமரசம் செய்வது போல் உள்ளது. ஆனால் குல்தீப் சமரசம் ஆகாமல் அன்று சூர்யகுமார் யாதவ் முதுகில் தட்டியதை இன்று அவருக்கே அதனை திருப்பி செய்திருக்கிறார். இருவரும் காமெடியாக இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். இது வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Feb 17, 2026 11:05 AM IST


