Last Updated:
இந்தியா போன்ற வலிமையான அணிகளை எதிர்கொள்ளும் போது, பழைய பாணியிலான ஆட்டம் செல்லுபடியாகாது
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் சீனியர் வீரர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது யூசுப் வலியுறுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதாக வென்றது.
முதலில் விளையாடிய இந்திய அணி 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்த பாகிஸ்தான் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் கூறியதாவது- பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஷதாப் கான் ஆகிய மூவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.


