Last Updated:
No confidence motion | ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 12ஆம் தேதி நிறைவடைந்தது.
இதில் ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய புத்தகக் குறிப்புகள், அமெரிக்க வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமரின் பதிலுரை இன்றி நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியைத் தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து, ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு தொடங்கும் மார்ச் 9ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
Feb 16, 2026 11:37 AM IST
Om Birla | மார்ச் 9-ல் சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கிரண் ரிஜிஜு அறிவிப்பு


