
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கெதிரான குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு 176 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, இஷன் கிஷனின் 77 (40), அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் 32 (29), ஷிவம் டுபேயின் 27 (17), திலக் வர்மாவின் 25 (24), ரிங்கு சிங்கின் ஆட்டமிழக்காத 11 (04) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் சைம் அயூப் 4-0-25-3, அணித்தலைவர் சல்மான் அக்ஹா 2-0-10-1, உஸ்மான் தாரிக் 4-0-24-1, மொஹமட் நவாஸ் 4-0-24-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

