ரொக்க வைப்பு வரம்பு: தற்போதைய விதிகளின்படி, வங்கி அல்லது தபால் நிலையத்தில் ஒரு நாளில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்தால், நீங்கள் பான் விவரங்களை வழங்க வேண்டும். ஆனால், தற்போது முன்மொழியப்பட்ட விதிகளின்படி, இந்த தினசரி வரம்பு வருடாந்திர வரம்பால் மாற்றப்படும். அதாவது, நீங்கள் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், பான் தேவைப்படும். உங்களிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தாலும் அதே வரம்பு பொருந்தும். அந்த வரம்பிற்குப் பிறகு நடக்கும் பரிவர்த்தனைகள் வருமான வரியின் மேற்பார்வையின் கீழ் வரும்.


