அமெரிக்காவில் கடற்கரைக்குச் சென்ற குழந்தைகள் 73 சிப்பி போல தோற்றமளிக்கும் இறால் வகையான மட்டியை எடுத்து வந்ததால், அவர்களது தாய்க்கு 73 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் வாழும் உயிரினங்களில் அதிக அழகும், அதிக சுவையுடனும் கடல் மட்டி இருக்கும். பார்ப்பதற்கு சிப்பி போன்று காட்சியளிக்கும் இவற்றின் ஓடுகளுக்கு உள்ளே சுவை மிகுந்த சதைப்பற்று இருப்பதால், பல நாடுகளிலும் இது மிகவும் விருப்பமான உணவாக இருக்கிறது. இந்த மட்டிகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண கடற்கரைகளில் அதிகளவில் காணப்படுகின்றன.
இதையும் படிக்க:
அமெரிக்காவை தாக்கிய சூறாவளி… அதிகாரிகள் சொன்ன ஷாக் ரிப்போர்ட்!
இந்நிலையில், சார்லட் ரஸ் என்பவருடன் கடற்கரைக்குச் சென்ற அவரது குழந்தைகள், அவைகள் சிப்பிகள் என நினைத்து 72 மட்டிகளை சேகரித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது, அவர்கள வழிமறித்து சோதனை நடத்திய மீன்வளத்துறையினர், மட்டிகளை சேகரித்த குற்றத்திற்காக, 88,000 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தனர். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.73 லட்சம். ஏனெனில், கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பிஸ்மோ கடற்கரை, மட்டிகளின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது.
இங்கு மீனவர்களைத் தவிர வேறு யாரும் மட்டிகளை சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் என்றாலும், ஒரு நாளைக்கு 10 மட்டிகளுக்கு மேல் சேகரிக்கக் கூடாது. ஆனால், எவ்வித அனுமதியும் இல்லாமல், குழந்தைகள் 72 மட்டிகளை சேகரித்தனர். இதனால், குழந்தைகளின் தாயார் சார்லட் ரஸ்-க்கு மீன்வளத்துறையினர் அபராதம் விதித்தனர்.
இதனால், தங்களது சுற்றுப் பயணமே பாழாகிப் போனதாகவும், மிகவும் சோகமாகவும், மனச்சோர்வுடன் இருப்பதாகவும் சார்லட் ரஸ் தெரிவித்துள்ளார். கடற்கரைகளில் பெரும்பாலும் எதையுமே தொடக்கூடாது என்பது தனக்கு தெரியும் என்றும், இருப்பினும் குழந்தைகள் சிப்பி என்று நினைத்தே மட்டிகளை சேகரித்ததாகவும் கூறியுள்ளார். பின்னர், பிறரின் ஆலோசனையின் பேரில் நீதிமன்றத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டதால், அபராதம் 500 டாலராக குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
