Last Updated:
ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே களத்தில் நின்றபோது அணியின் ஸ்கோர் 240யை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவுக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் 18 ஆவது மேட்ச்சாக இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதும் போட்டி டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கி அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 3 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 21 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க, சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி தள்ளிய இஷான் கிஷன் 24 பந்துகளில் 5 சிக்சர் 6 பண்டரியுடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வழக்கம் போல ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். 28 பந்துகளை எதிர்கொண்ட பாண்ட்யா தலா 4 சிக்சர் பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 23 ரன்களில் வெளியேறினார்.
ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே களத்தில் நின்றபோது அணியின் ஸ்கோர் 240யை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 4 ஓவர்களில் நமீபியா அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட்டுக்களை அள்ளியது.


