இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பல்வேறு தரப்பு விசாரணைக்கு பிறகு, கடந்த ஜூன் 16ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதமும், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸின் இந்த நடவடிக்கைக்கு துணையாக இருந்த புகாரில் செங்கல்பட்டு எஸ்.பியாக இருந்த கண்ணனுக்கு 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

&w=1200&resize=1200,675&ssl=1)