• Login
Thursday, February 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு எதிராக பாய்கிறது சட்ட நடவடிக்கை: டான் ஸ்ரீ அஸாம் பாக்கி அதிரடி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 11, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு எதிராக பாய்கிறது சட்ட நடவடிக்கை: டான் ஸ்ரீ அஸாம் பாக்கி அதிரடி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி, சர்வதேச ஊடகமான புளூம்பெர்க்கிற்கு (Bloomberg) எதிராக அதிரடியான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

நிதி நிறுவனம் ஒன்றில் தமக்கு பல மில்லியன் பங்குகள் இருப்பதாக வெளியான செய்தியை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சமீபத்தில் புளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில், ஒரு நிதிச் சேவை நிறுவனத்தில் அஸாம் பாக்கிக்கு 17.7 மில்லியன் பங்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி, மலேசிய அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அஸாம் பாக்கி பின்வரும் முக்கிய கருத்துகளை முன்வைத்தார்:
“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. தற்போது பங்குச் சந்தையில் எனக்கு எந்தவொரு பங்கும் கிடையாது,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதியே இது குறித்து முறையான விளக்கம் அளிக்கப்பட்டும், அந்த விளக்கத்தைச் செய்தியில் சேர்க்காமல் புளூம்பெர்க் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தச் செய்தி தனது தனிப்பட்ட நற்பெயரையும், SPRM அமைப்பின் கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக அணுகியுள்ள அஸாம் பாக்கி, புளூம்பெர்க் நிறுவனத்திற்கு எதிராக நாளை (வியாழக்கிழமை) முறையான சட்டப்பூர்வ நோட்டீஸ் (Legal Notice) அனுப்பப்படும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

பொய்ச் செய்திகள் மூலம் அமைப்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்பதே அவரின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று

Next Post

இந்திய எண்ணெய் விவகாரம் : ட்ரம்பிற்கு ரஷ்யா பதிலடி

Next Post
இந்திய எண்ணெய் விவகாரம் : ட்ரம்பிற்கு ரஷ்யா பதிலடி

இந்திய எண்ணெய் விவகாரம் : ட்ரம்பிற்கு ரஷ்யா பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin