லிகாஸில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 75,000 ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மதிப்புள்ள 2,300 யூனிட் வேப் திரவம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) இரவு Ops Taring Landai E-Cigarette Megaவின் போது, கடல்சார் காவல்துறை, சபா சுகாதாரத் துறை அதிகாரிகள், மாவட்ட காவல்துறையினர் 92 வகையான வேப் பாட்களைக் காட்சிப்படுத்திய ஒரு கடையைக் கண்டறிந்து, வளாகத்தில் மேலும் சோதனை நடத்தினர்.
இதன் மூலம் வளாகத்தில் 2,353 யூனிட் திரவ வேப் கண்டுபிடிக்கப்பட்டது என்று சபா கடல்சார் காவல்துறைத் தளபதி உதவி ஆணையர் அஹ்மத் அம்ரி அப்துல் ரஹ்மான் புதன்கிழமை (பிப்ரவரி 11) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் 75,825 ரிங்கிட் மதிப்புள்ளவை என்றும் இவ்விவகாரம் பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 இன் கீழ் விசாரிக்கப்படும் என்று அவர் கூறினார்.பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக வேப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்க இதேபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். புகைபிடிக்கும் பொருட்களின் அங்கீகரிக்கப்படாத விற்பனை குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.




