
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தாக்கிய கடுமையான குளிர் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனவரி மாத இறுதியிலிருந்து நியூயார்க் நகரம் கடும் குளிரான காலநிலையை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், வரவிருக்கும் நாட்களில் கடுமையான குளிர் மற்றும் அதிகரிக்கும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் ஆபத்தான நிலை உருவாகக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

