Last Updated:
தன் கைகளால் தங்களைப் பாதுகாக்கத் தெரியாத எந்தத் தேசத்திற்கும் மற்ற நாடுகள் உதவிக்கு வராது என்று டகாய்ச்சி கூறியுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சனே டகாய்ச்சி தலைமையிலான ஆளுங்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே மறைவுக்குப் பின் ஆளுங்கட்சியான எல்டிபி-யின் தலைமைப் பதவிக்கு நடந்த உட்கட்சித் தேர்தலில் கடந்த ஆண்டு வென்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி வரலாறு படைத்தார்.
இருப்பினும் ஜப்பானில் நீண்ட காலமாக ஆளும் கட்சிப் பொறுப்பில் இருந்த எல்டிபி-யின் ஆட்சியை மார்ச்சில் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தும் துணிகரமான முடிவை டகாய்ச்சி எடுத்தார்.
இது ஒரு சூதாட்டம் போன்றது என பல்வேறு தரப்பினரும் எச்சரித்த நிலையில், தேர்தல் முடிவுகள் நல்ல பலனைத் தந்துள்ளது.
மொத்தம் உள்ள 465 தொகுதிகளில் ஆளும் எல்டிபி மட்டும் 316 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சியான புதுமைக் கட்சி 36 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி 113 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன.
தேர்தலில் வென்றபிறகு உரையாற்றிய சனே டகாய்ச்சி, ஜப்பானின் கடல்சார் எல்லை மற்றும் வான் எல்லை உள்ளிட்டவற்றின் இறையாண்மையைக் கட்டிக் காக்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ராணுவம் மற்றும் உளவுத்துறை மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தன் கைகளால் தங்களைப் பாதுகாக்கத் தெரியாத எந்தத் தேசத்திற்கும் மற்ற நாடுகள் உதவிக்கு வராது என்றும் டகாய்ச்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Feb 09, 2026 10:03 PM IST

