20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா, அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய வீரர்கள், அமெரிக்காவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.


