மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர் 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் என்றும், மற்ற இருவரும் 24 மற்றும் 39 வயது மதிக்கத்தக்க மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அபாயகரமான பொருட்களை கையாளும் நிபுணர்களின் உதவியுடன் பாதுகாப்பாக நைட்ரஜன் சல்பைட் வாயுவை முழுமையாக அகற்றப்பட்டதாக குடிமை தற்காப்பு படை தெரிவித்தது.
இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தது.
மேலும் ஊழியர்களின் நலன் தங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்தது.இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று PUB தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதே போன்ற செயல்பாடுகளை நிறுத்தி அதனை பாதுகாப்பு நடைமுறை சோதிக்கப்பட்டு வருவதாக PUB கூறியது.

