Last Updated:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, அந்த அணியின் ரகுமானுல்லா குர்பாஸ், இப்ராகிம் சத்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இப்ராகிம் சத்ரன் 10 ரன்களிலும், குர்பாஸ் 27 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். குல்பதீன் நயிப் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 63 ரன்கள் விளாசிய நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.
183 ரன்களை இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிரடி வீரர் ஃபின் ஆலன் வெறும் ஒரு ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமலும், முஜீப் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். குறிப்பாக டிம் ஷெஃபர்ட் 65 ரன்கள் அடித்தார். இறுதியில் அந்த அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


