ரஷ்யாவில் தற்போது வேலையின்மை விகிதம் மிகக் குறைவாக (சுமார் 2.4%) இருந்தபோதிலும், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
உக்ரைன் போருக்காகப் பல லட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அத்தோடு போருக்குப் பயந்து மற்றும் பொருளாதாரத் தடைகளால் பல தொழில்நுட்ப வல்லுநர்களும் இளைஞர்களும் ரஷ்யாவை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றனர்.
அதேநேரம் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வழக்கமாக வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதுகாப்பு காரணங்களால் குறைந்துள்ளது.
இந்நிலையில் கட்டுமானத் துறை, ஜவுளித் துறை மற்றும் விவசாயத் துறைகளில் பணிபுரிய இந்தியத் தொழிலாளர்களை ஈர்க்க ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து சுமார் 1 லட்சம் தொழிலாளர்களை அழைத்து வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
அதேநேரம் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, அந்நாட்டுத் தொழிலாளர்களைத் தையல் தொழில் (Garments) மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பணியமர்த்த ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன..,;.,




