Last Updated:
பலவீனமான அணியாக கருதப்படும் நெதர்லாந்து அணியிடமே பாகிஸ்தான் தடுமாறி வெற்றி பெற்றிருப்பது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் போராடி வெற்றி பெற்றுள்ளது. அதிக பலமில்லாத அணியிடமே பாகிஸ்தான் தடுமாறி விளையாடியிருப்பது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களும், பாஸ் லீட் 30 ரன்களும், காலின் ஆக்கர்மென் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணி 147 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கினாலும், நெதர்லாந்து அணியின் கட்டுக் கோப்பான பவுலிங்கால் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறத் தொடங்கினர்.
சைம் அயுப் 24 ரன்களும், கேப்டன் சல்மான் அகா 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.
தொடக்க வீரர் சகிப்சதா பர்கான் மட்டும் 31 பந்துகளில் 47 ரன்கள் அதிரடியாக சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

