புதுடெல்லி, பிப்ரவரி 7, 2026:
இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் சோதனைகளில், பாதிக்கும் மேற்பட்ட விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், கடந்த 2025 ஜனவரி முதல் 2026 பிப்ரவரி 3-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டார்.



