இந்தியாவுக்கு எதிராக வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியை புறக்கணிக்க உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், மற்ற அணிகள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள 20 அணிகள், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் A-வில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் , அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.
குரூப் B-யில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் உள்ளன.
குரூப் C-யில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் D-யில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் உள்ளன.
குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற அணிகளுடன் மோதும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 8 அணிகளும் தற்போதைய ஐசிசி தரவரிசை மற்றும் 2024 உலகக்கோப்பை முடிவுகளின் அடிப்படையில் “டாப் சீட்ஸ்”ஆகக் கருதப்படுகின்றன.
ஒரு வேளை இந்த 8 அணிகளில் ஏதேனும் ஒன்று Group Stage-லிருந்து வெளியேறினால், அந்த இடத்தைப் பிடிக்கும் புதிய அணி அந்த சீடிங் இடத்தைப் பெற்று சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும்.
உலகக் கோப்பை தொடரில் பங்குபெறும் 20 அணிகளும் 4 போட்டிகளில் விளையாடும். சூப்பர் 8 சுற்றில் வெளியேறும் அணிகள் 7 போட்டிகளில் களம் காணும். அரையிறுதி போட்டியில் தோல்வியடையும் அணிகள் 8 போட்டிகளிலும் இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் 9 போட்டிகளிலும் விளையாடும்.

