உத்தரபிரதேசம் பரேலி மாவட்டத்தில் முகமது ஃபைசான் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றபோது கான்க்ரீட் Slabs விழுந்து உயிரிழந்தார். இது சமூகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேசத்தில் மேம்பால கட்டுமான பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கான்க்ரீட் Slabs மீது ஏறி நடனமாடிய இளைஞர், உயிரிழக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ரீல்ஸ் மோகத்தில் விபரீத செயலில் ஈடுபட்டு உயிரை விட்டு இளைஞரின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான முகமது ஃபைசான். சாகச சம்பவங்களை செய்கிறேன் என்ற பெயரில் விபரீத செயலில் ஈடுபட்டு அதை இன்ஸ்டாவில், ரீல்ஸ் வீடியோவாக அப்லோடு செய்து வந்தார். ஆனால் “ஒரு நாள் அந்த விபரீத செயலே தன்னை காவு வாங்கிவிடும்” என்பதை அவர் உணரவில்லை. சம்பவத்தன்று பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே சென்றவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கான்க்ரீட் ஸ்லாப் மீது ஏறி நின்று, சினிமா பாடலுக்கு நடனமாடி வீடியோ எடுத்துள்ளார்.
இரண்டாவது டேக்கின்போது எதிர்பாராத விதமாக பேலன்ஸ் தடுமாறி Slabs சரிந்து, அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது முகமது ஃபைசான் மீது கான்க்ரீட் ஸ்லாப் விழுந்ததில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவர் அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் பாலம் கட்ட நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் உதவியுடன், கான்க்ரீட் கல்லை அப்புறப்படுத்தி, உள்ளே சிக்கிக்கொண்டிருந்த ஃபைசானின் சடலத்தை மீட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குபதிந்து பைசானின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கான்க்ரீட் ஸ்லாப் மீது ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்க முயன்ற போதே, அங்கிருந்த ஊழியர் ஒருவர் பைசானை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் வீடியோ எடுக்கும் ஆர்வத்தில், அவரது பேச்சை கேட்காமல் பைசான் எல்லைமீறியுள்ளார். தற்போது அவரை இழந்து உறவினர்களும் நண்பர்களும் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ரீல்ஸ் Addict -ல் இது போன்று ஆபத்து சாகசம் செய்தால், சம்பவமாகி உயிருக்கு உலை வைக்கும் சூழல் உண்டாகும் என்பதை உணர வேண்டும்.
இளைஞரின் உயிரை பறித்த ரீல்ஸ் மோகம்.. இரண்டாவது டேக்கில் காத்திருந்த அதிர்ச்சி.. கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?

