• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வன்புணர்ந்த மைத்துனர்

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வன்புணர்ந்த மைத்துனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுக்குபுர, அகலேமட பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் அவரது மைத்துனர் திங்கட்கிழமை (02) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


பாதிக்கப்பட்ட யுவதியின் சகோதரி தனது கணவரிடமிருந்து பிரிந்து, மறுமணம் செய்து கொள்ளவிருக்கும் நபருடன் வசித்து வந்துள்ளார்.  அவர் வேலைக்குச் செல்லும் போது தனக்குத் துணையாக இருப்பதற்கு மனநலம் பாதிக்கப்பட்ட தனது தங்கையை வீட்டிற்கு அழைத்து வருமாறு குறித்த பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார்.


அதன்படி, பிபிலை கணுல்வெல மடிப்பலன்முல்ல வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிற்கு யுவதியை அழைத்து வருவதற்காக காதலனை அனுப்பி வைத்துள்ளார். 


சந்தேக நபர் யுவதியை அழைத்து வரும் வழியில் பலத்த மழை பெய்துள்ளதால், அவர்கள் ஒரு வயல்வெளியில் உள்ள  பாழடைந்த அறை ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு சந்தேக நபர் குறித்த யுவதியை  பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.


இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட யுவதி தனது தாயிடமும் சகோதரியிடமும் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவப் பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரபாத் திஸாநாயக்க முன்னெடுத்து வருகிறார். 


சுமனசிறி குணதிலக்க



Read More

Previous Post

நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியாகும் ஜி.வி. பிரகாஷின் ‘லக்கி’! | Makkal Osai

Next Post

லஞ்சம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு யோ பொதுமக்களை வலியுறுத்துகிறார், ஆனால் கொடுப்பவர்கள் மீது கேள்விகள் நீடிக்கின்றன – Malaysiakini

Next Post
லஞ்சம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு யோ பொதுமக்களை வலியுறுத்துகிறார், ஆனால் கொடுப்பவர்கள் மீது கேள்விகள் நீடிக்கின்றன – Malaysiakini

லஞ்சம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு யோ பொதுமக்களை வலியுறுத்துகிறார், ஆனால் கொடுப்பவர்கள் மீது கேள்விகள் நீடிக்கின்றன – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin