• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 76.8 டன் மாண்டரின் ஆரஞ்சுகள் எரிந்து நாசமாகின | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 2, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 76.8 டன் மாண்டரின் ஆரஞ்சுகள் எரிந்து நாசமாகின | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா பாரு: ஜாலான் கெபுன் சுல்தான் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சீனப் புத்தாண்டுக்காக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 76.8 டன் மாண்டரின் ஆரஞ்சுகள் எரிந்து நாசமாகின. கிடங்கிற்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்ற பிறகு இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியவந்ததாக கிடங்கு மேலாளர் ஹாங் லெங் ஃபெங் கூறினார்.

இந்த மாண்டரின் ஆரஞ்சுகள் அனைத்தும் கிளந்தான் முழுவதற்குமான பொருட்கள், கோத்தா பாருவில் உள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் இந்தக் கிடங்கிலிருந்து தங்கள் இருப்பைப் பெறுகின்றன என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். அவரது கூற்றுப்படி, கிடங்கு சுமார் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது, ஆனால் தீ விபத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான மாண்டரின் ஆரஞ்சு விநியோகத்தை இது பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து  பொருட்களும் அழிந்து விட்டது என்று அவர் கூறினார்.

கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் ஃபத்லிசில் இக்ராம் அஹ்மத் பவுசி கூறுகையில், தனது துறைக்கு இரவு 9.09 மணிக்கு NG999 அமைப்பு மூலம் அவசர அழைப்பு வந்ததாகவும், பல குழுக்களை அந்த இடத்திற்கு அனுப்பியதாகவும் கூறினார்.

சேமிப்பு ரேக்குகள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து கிடங்கிற்குள் நுழைவதில் சிரமங்கள் ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் ஸ்கைலிஃப்டைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஃபத்லிசில் கூறினார். இரண்டு லோரிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அழிக்கப்பட்டதாகவும், கிடங்கு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.

Previous articleசென்னை: கடலோர காவல் படை 50-வது நிறுவன தினம் விமரிசையாக கொண்டாட்டம்
Next articleபிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

ஈரான் மீது தாக்குதல்… பிராந்திய அளவிலான போர் வெடிக்கும்.. டிரம்புக்கு கமேனி எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

Next Post

Tamilmirror Online || வெலிகம பிரதேச சபை புதிய தவிசாளராக ஹேவா பதிரண

Next Post
Tamilmirror Online || வெலிகம பிரதேச சபை புதிய தவிசாளராக ஹேவா பதிரண

Tamilmirror Online || வெலிகம பிரதேச சபை புதிய தவிசாளராக ஹேவா பதிரண

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin