யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். மயிலிட்டி பகுதியில் இன்று (02.02.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவரை இராணுவ
வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்து சம்பவத்தில் நவரட்ணம் என்ற முதியவரே உயிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் பலாலி காவல்துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |

