Last Updated:
மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை 9 சதவீதம் உயர்த்தி, 12.2 லட்சம் கோடி ரூபாயாக நிதியமைச்சர் நிர்ணயித்துள்ளார்
மத்திய பட்ஜெட் 2026-27 இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கல்வி முதல் வேலை வாய்ப்பு வரை இளைஞர்களுக்கு உதவும் விதமாக புதிய நிலைக்குழு அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் சேவைத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய ஒரு புதிய உயர்நிலை குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தக் குழு, இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை வகுக்கும்.
மேலும் இந்தக் குழு சேவை துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இளைஞர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்.
மேலும், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த, மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை 9 சதவீதம் உயர்த்தி, 12.2 லட்சம் கோடி ரூபாயாக நிதியமைச்சர் நிர்ணயித்துள்ளார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Feb 01, 2026 12:44 PM IST


