Last Updated:
வருமான வரியில், நிலையான கழிவுத் தொகை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2026-2027-ஆம் நிதியாண்டுக்கான தனி நபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வருமான வரியில், நிலையான கழிவுத் தொகை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், மருத்துவம் மற்றும் கல்விச் செலவுகளுக்கான வரிப்பிடித்தம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும்,
விபத்துக் காப்பீட்டிற்கு கிடைக்கும் வட்டித்தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புதிய வருமான வரிச்சட்டம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் எனவும், எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரித் தாக்கல் படிவம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை தொடரும் எனவும், வருமான வரிக் கணக்கில் திருத்தம் செய்து, குறைவான அபராத தொகையுடன் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 31-ஆம் தேதியில் இருந்து மார்ச் 31-ஆம் தேதியாக நீட்டிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
மேலும், வருமான வரி கணக்கு தாக்கலின்போது வருமானத்தை மறைத்தால் இனிமேல் 100 சதவீத தொகை அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Union Budget | “வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம்” – வருமான வரி குறித்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்!


