வழக்கமாக பட்ஜெட் உரைகள் பகுதி ஏ, பகுதி பி என பிரிக்கப்பட்டிருக்கும். பகுதி ஏ-வில் அரசின் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறும் நிலையில், பகுதி பி உரையில் மறைமுக வரிகள் உள்ளிட்ட குறைந்தளவு உரையே இடம்பெறும். ஆனால், இந்த பட்ஜெட்டில் இரண்டு பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிர்மலா சீதாராமன், நீண்ட நேரம் உரையாற்றுவார் என கூறப்படுகிறது. தொடர்ச்சியாக 9ஆவது முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.


