• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || எழுத்தாளர் பாலா சங்குபிள்ளை காலமானார்

GenevaTimes by GenevaTimes
January 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || எழுத்தாளர் பாலா சங்குபிள்ளை காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




மலையகக் கலைஞரும் எழுத்தாளருமான பாலா சங்குபிள்ளை காலமானார்.


1957 மே 12ஆம் திகதியன்று பிறந்த  சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன்  ஒரு ஈழத்து எழுத்தாளரும், ஆய்வாளருமாவார். இவர் கே.எஸ்.பாலா, இளைய பாலா ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதி வந்துள்ளார்.


 ஹட்டனில்  பிறந்த சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன் ஹட்டன் ஹைலன்ஸ் தேசிய பாடசாலை,  கண்டி அசோகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். .


பாலா சங்குப்பிள்ளையின் முதலாவது சிறுகதை 1980ம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் ‘புதிய தீர்ப்பு’ எனும் தலைப்பில் பிரசுரமானது. 1990ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன   வர்த்தக சேவையில் இவரது முதலாவது கதை ஒலிபரப்பானது. இதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 150க்கு மேற்பட்ட அரசியல், அறிவியல், ஆரோக்கிய, சினிமா, இலக்கக் கட்டுரைகளையும், நான்கு தொடர் கதைகளையும் எழுதியுள்ளார்.


இலங்கையில் துரைவி  வெளியீட்டகத்தின் மூலமாக வெளியான ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ சிறுகதைத் தொகுதியிலும், மணிமேகலைப் பிரசுரமாக வெளியான மூன்று இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.


காதலுனுக்குக் கல்யாணம் (சிறுகதைத் தொகுதி), ஓர் உன்னதத் தமிழனின் கதை (சிறுகதைத் தொகுதி) ஆகிய இரண்டு இரண்டு நூல்களை பாலா சங்குப்பிள்ளை   எழுதி வெளியிட்டுள்ளார்.


1998ம் ஆண்டு 05ம் மாதம் 31ம் திகதி ஹட்டனில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இவரின் சிறுகதைத் துறைக்காகவும்,


2006 ஜனவரி 28,29ம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் போது இவரின் எழுத்தாக்கத் துறைக்காகவும்,


2006 டிசம்பர் 17ம் திகதி கண்டியில் நடைபெற்ற 2006 – மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் போது சிறந்த நூலுக்காகவும் கௌரவிக்கப்பட்டார்.  



Read More

Previous Post

பத்துமலையில் இயங்கும் படிக்கட்டு சிக்கல் தீர்க்கப்படும்

Next Post

மறைந்த அஜித் பவாரின் மனைவி துணை முதல்வராக இன்று பதவியேற்க வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மறைந்த அஜித் பவாரின் மனைவி துணை முதல்வராக இன்று பதவியேற்க வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

மறைந்த அஜித் பவாரின் மனைவி துணை முதல்வராக இன்று பதவியேற்க வாய்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin