நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ரணிலின் இங்கிலாந்து பயணம் தொடர்பான வழக்கு விசாரணை, பல அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் முடிவடையும், அதன் பின்னர் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என சட்டமா அதிபர் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில் வெளியிட்டார்.
இந்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

