திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சலக அடையாள அட்டை வேண்டிய நபர்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அஞ்சலக அடையாள அட்டை என்ற சேவையின் மூலம் பொதுமக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
அஞ்சலக அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம்பெற்று இருக்கும். அஞ்சலக அடையாள அட்டையினைப் பொதுமக்கள் அனைத்துத் தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை ரூ.20 செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: Elephant Census: களக்காட்டில் யானைகள் கணக்கெடுப்பு… திருமலை நம்பி கோவிலுக்குச் செல்லத் தடை நீட்டிப்பு…
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல் மற்றும் குறிப்பிட்டுள்ள முகவரியை உறுதி செய்யும் ஏதேனும் ஒரு சான்றின் நகல் ஆகியவற்றை இணைத்து தலைமை அஞ்சலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அஞ்சல்காரர் மூலமாக முகவரி சரிபார்க்கப்பட்டு அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்படும்.
அஞ்சலக அடையாள அட்டைக்கான கட்டணம் ரூ.250 ஆகும். பதிவு தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ.22 கூடுதலாகச் செலுத்த வேண்டும். அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்களுக்கு செல்லுபடி ஆகும். ஆதார் அட்டையில் முகவரி திருத்தம், மாற்றம் செய்யவும் வங்கி மற்றும் அலுவலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் இதனை ஒரு சான்றாகப் பயன்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
