Last Updated:
Budget | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க, திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அடுத்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து, இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு, அடுத்த மாதம் 13ஆம் தேதிவரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதிவரையும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இந்த கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்டக் குழுக் கூட்டம், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், மூத்த தலைவர் சசிதரூர் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், கூட்டம் குறித்து ஒரு நாள் முன்னதாகவே தகவல் கிடைத்ததால் பங்கேற்க முடியவில்லை என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.
Union Budget | இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்.. காலை 11 மணிக்கு உரையாற்றும் குடியரசு தலைவர்..!


